இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், ஜூன் 14, 2011

மாற்றுக் கல்விக்கான நூல் விவாத கருத்தரங்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டம் மற்றும் பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம் மேற்கு மண்டலம் இணைந்து மாற்றுக் கல்விக்கான நூல் விவாத கருத்தரங்கு 13/06/2011 அன்று சேலம் அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் பள்ளிக்கூட தேர்தல் , ஓய்ந்திருக்கலாகாது ஆகிய கல்வி சிந்தனை நூல்கள் விவாதிக்கப்பட்டன, நிகழ்ச்சியில் பார்வையற்ற ஆசிரியர்கள் , சங்க நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் 25 பேர் வரையிலும், அறிவியல் இயக்கம் சார்பாக ஆசிரியர்கள், பேராசிரியர், மற்றும் நிர்வாகிகள் 10 பேர் வரையிலும் பங்குபெற்றனர், விவ்தங்களுடன் சமச்சீர் கல்வியின் தேவை, பார்வையற்ற ஆசிரியர்கள் பள்ளி கல்லூரிகளில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அன்றாட நடவடிக்கைகளில் குழந்தைகளும் பெற்றோரும், மற்றும் மாற்றுக் கல்விக்கான நூல் அறிமுகம் போன்றவைகளும் நடைபெற்றது,  மீண்டும் மூன்று மதங்களுக்கு ஒருமுறை இரு நாள் தாங்கும் முகாமாக நடத்த முடிவெடுத்துள்ளனர்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக