இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

திங்கள், நவம்பர் 16, 2009

பருவநிலை செயல்பாட்டுக்கான சர்வதேச தின ( அக்டோபர் - 24 ) கருத்தரங்கம் 24-10-2009 ( 25 )

பருவநிலை செயல்படுக்கான சர்வதேச தினம் (அக்டோபர் - 24 ,) கருத்தரங்கம் புவி வெப்பமடைதலும் பருவநிலை மாற்றங்களும் எனும் தலைப்பில் 24-10-2009 அன்று சேலம் தமிழ் சங்க அரங்கில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் புவியை காக்கஅரசின் பங்கு குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட செயலாளர் திருமிகு.ஜெயமுருகன் கருதுரயற்றினார், நிகழ்ச்சியை சேலம் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு, செம்மலை துவங்கிவைத்தார், அறிஞர் பெருமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறபித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக