இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

வியாழன், அக்டோபர் 22, 2009

தமிழ்நாடு அறிவியல் இயக்க 15 வது மாநில மாநாடு 02 / 03 & 04 - 10 -2009 ( 4 )

தமிழ்நாடு அறிவியல் இயக்க 15 வது மாநில மாநாடு , நஞ்சையா லிங்கம்மாள் கல்யாண மண்டபம் , மேட்டுப்பாளையம், கோவை மாவட்டத்தில் 02 / 03 & 04 - 10 -2009 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது, மாநாட்டில் அனைத்து அறிவியல் இயக்க முன்னோடிகள், வழிகாட்டிகள், விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், நிர்வாககுழு , செயற்குழு, பொதுகுழு உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர், முதல் நாள் முனைவர் ஆர்.இளங்கோவன் ( இயக்குனர் , ஆசிரியர் கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ) அவர்களின் " தமிழகத்தில் தரமான பள்ளி கல்வி " கருத்தரங்கமும், முன்றாம் நாள் திரைப்பட இயக்குனர் திருமிகு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் " பெண்ணும் ஆணும் சரி நிகரென ..." , AIPSN இன் முன்னால் தலைவர் முனைவர் V.B.ஆத்ரேயா அவர்களின் " உணவு பாதுகாப்பு " மற்றும் மும்பை TISS விஞ்ஞானி முனைவர் T.ஜெயராமன் அவர்களின் " கால நிலை மாற்றம் " கருத்தரங்கும் சிறப்பாக அமைந்தது, குறிச்சி IBEA பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அரங்கில் அனைவரையும் சிந்திக்கும் வகையில் மிகவும் சிறப்பாக அமைந்தது, மாநாட்டு அறிக்கை மற்றும் நிதி அறிக்கை சமர்பித்து விவாதிக்கப்பட்டது, புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது, புத்தகங்கள், அறிவியல் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக