அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
நாள்காட்டி
வெள்ளி, அக்டோபர் 30, 2009
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 08-10-2009 (19)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான இளம் விஞ்ஞானிகளின் ஆய்வுகளை பொது மக்களுக்கு விளக்கிய நிகழ்ச்சி 08-10-2009 அன்று காலையில் ஆச்சாங்குட்டப்பட்டியில் நடைபெற்றது , நிகழ்ச்சியில் தண்ணிரில் தேவையற்ற உப்புகளை எவ்வாறு நீக்குவது என்பதுகுறித்த விளக்கமளிக்கப்பட்டது, நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் அவர்கள் கலந்துகொண்டு அறிவியல் இயக்க அறிமுகத்துடன் சிறபுரைஆற்றினார், தேசிய குழந்தைகள் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் இணை செயலருமான திருமிகு. ஆண்டனிஜோதி நம்பி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார், நிகழ்ச்சியில் சேலம் மாநகர மேயர் திருமிகு.ரேகா பிரியதர்சினி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக