இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், செப்டம்பர் 01, 2009

ஹிரோஷிமா நாகசாகி நிகழ்ச்சிகள் 28-08-2009 ( 8 )








சேலம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக அத்வைத ஆஸ்ரமம் சாலையில் உள்ள ஹோலி பிளவர் பள்ளியில் ஹிரோஷிமா நாகசாகி நிகழ்ச்சிகள் 28-08-2009 அன்று காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெற்றது, நிகழ்ச்சியில் அறிவியல் இயக்கம் சார்பாக செயலர் திருமிகு.ஜெயமுருகன் கலந்துகொண்டு அறிவியல் ஆக்கதிற்கே எனும் முழக்கங்களுடன், அணு ஆயுத எதிர்ப்பு பாடல்கள் பாடி, ஹிரோஷிமா நாகசாகி உறுதிமொழி ஏற்கப்பட்டது, சிறப்பு குறும்படம் மூலம் ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வை மாணவர்களுக்கு விளக்கப்பட்டது, புகைப்பட கண்காட்சி, ஹிரோஷிமா நாகசாகி மாதிரி அமைக்கப்பட்டிருந்தது, மாவட்ட துணை தலைவரும், ஹிரோஷிமா நாகசாகி ஒருங்கினைப்பலாருமான திருமிகு.பாண்டியன் ஒரிகாமி முறையில் மாணவர்கள் வெண்புறாக்கள் செய்து பார்வைக்கு வைத்தார் மேலும், புத்தக விற்பனை திருமிகு. கோபால் அவர்கள் தலைமையில், திருமிகு. ராம்குமார் இணைந்து நடைபெற்றது, பொருளாளர் திருமிகு.ராமமூர்த்தி மற்றும் இணை செயலர் திருமிகு.சுரேஷ் விழாவிற்கான முன் ஏற்பாடுகளை செய்தனர், மேலும், திருமிகு, ஷண்முகம், திருமிகு.மொதன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாவட்ட மெட்ரிக் அதிகாரி, பள்ளி தாளாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக