இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2009

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குகைகிளை துளிர்இல்ல துவக்கவிழா 16-08-2009 (1)


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குகை கிளை சார்பாக துளிர் இல்ல துவக்க விழா நிகழ்ச்சி 16-08-2009 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சி 46 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் திருமிகு. E.பாலசுப்பிரமணியம் மற்றும் ரோட்டேரியன் V.பொன்முடி வழக்கறிஞர் ஆகியோர்முன்னிலை வகித்தனர், முன்னதாக அனைவரையும் திருமிகு.ராம்குமார் வரவேற்றார், சர்.சி.வி ராமன் துளிர் இல்லத்தை செயலர்.திருமிகு.ஜெயமுருகன் துவக்கிவைத்து துளிர் இல்ல நிர்வாகிகளை நியமித்தார், துளிர் இல்ல செயல்பாடுகள் பற்றி துணை தலைவரும், துளிர் இல்ல பொறுப்பாளருமான திருமிகு.பாண்டியன் விளக்கினார், கலந்துகொண்ட அனைவருக்கும் திருமிகு.எக்ஸ்னோரா சண்முகம் அவர்கள் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக