இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

திங்கள், ஜூலை 23, 2012

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (NCSC) - 2012, (தலைப்பு : ஆற்றல் - தேடல், கையகப்படுத்துதல் மற்றும் சேமிதல்) வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுதல் சார்ந்தது.


மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்
மத்திய அரசின் விஞ்ஞானத் தொழில்நுட்பத் துறை (DST - Govt. of India) ஆதரவுடன் தேசத்தில் உள்ள குழந்தைகளின் அறிவியல் ஆய்வு மனப்பான்மையை தூண்டும் வகையில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பு (NCSTC - Network) தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை (NCSC) ஆண்டுதோறும் நடத்தி வருகிறதுதமிழகத்தில் தொடர்ந்து இம்மாநாட்டினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) 19 வருடங்களாக ஒருங்கிணைத்து வருகிறது

நமது பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்இளம் விஞ்ஞானி” என்ற தேசிய விருது பெறும் வாய்ப்பாக குழந்தைகள் அறிவியல் மாநாடு இருக்கும்

எனவே வழிகாட்டி ஆசிரியர் பயிற்சிமுகாமில் தங்கள் பள்ளியின் சார்பில் அறிவியல் / இயற்பியல் ஆசிரியர் அல்லது ஆர்வமுள்ள ஆசிரியர் ஒருவர் அல்லது இருவர் மட்டும் கலந்து கொள்ளச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வழிகாட்டி ஆசிரியர் பயற்சி முகாம் விபரம்

பயிற்சி நடைபெறும் இடம்
பயிற்சி நடைபெறும் நாள் மற்றும் நேரம்
விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அத்வைத ஆஸ்ரமம் ரோடு, அழகாபுரம், சேலம்636004. (புதிய பேருந்து நிலையம் எதிரில்),
 28/07/2012 சனிக்கிழமை
காலை 10.00 மணி முதல்
மாலை 4.00 மணி வரை

குறிப்பு:
Ø  மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Ø  பங்கேற்புச் சான்று வழங்கப்படும்

மேலும் விபரங்களுக்கு :

T.அந்தோணி ஜோதிநம்பி, 97901 05146
மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர், NCSC - 2012.

K.P.சுரேஷ்குமார், 94433 91777
மாநில செயலாக்கக் குழு உறுப்பினர். NCSC - 2012.

நன்றி. 

இடம்சேலம்.                                                                                                  இப்படிக்கு
தேதி   23 / 07 /2012 

G. மீனாட்சிசுந்தரம், (99521 70913)
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு- 2012,
சேலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக