இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

திங்கள், ஜூலை 25, 2011

10 வது மாவட்ட மாநாடு



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் 10 வது மாவட்ட மாநாடு 24-07-2011, ஞாயிறு அன்று ஜான்சன் பேட்டையிலுள்ள சுனில் மைத்ரா நினைவரங்கில் நடைபெற்றது,
மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் முனைவர். R.சாம்சன் ரவீந்திரன் தலைமைவகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.P.சகஸ்ரநாமம் துவக்க உரையாற்றினார், மாவட்ட செயலாளர் திருமிகு.V.ராமமூர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற வேலையறிக்கையை சமர்ப்பித்தார், மாவட்ட பொருளாளர் திருமிகு.G.சுரேஷ் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார், அறிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது,

மாநாட்டில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,  கோம்பைப்பட்டி, சட்டக்கல்லுரி, அசோக் நகர்,செட்டிச்சாவடி மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள குன்றுகள் சமூகவிரோதிகளால் வெடிவைத்து தகர்க்கப்பட்டு  மலை வளமும், மழைப் பொழிவும் குறைந்து எதிர்கால சந்ததியினர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்படுவதால் இயற்கை வளத்தை பாதுகாக்கப்பட வேண்டும், மருத்துவக் கல்லூரிக்கான அகில இந்திய அளவில் நடத்தப்பட இருக்கும் ஒருங்கிணைத்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், கிராமப்புற பள்ளி குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும், மாவட்ட நிர்வாகம் மாநகர் அறிவியல் மையம் அமைக்க வேண்டும், நகர்ப்புற  பள்ளிகளில்  படிக்கும்  மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்துதல் வேண்டும், ஏற்காடு  ஏரியில்  கழிவுநீர்  கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், உயர்  கல்வியில்  ஆங்கிலப்  பாட  தேர்ச்சி  விழுக்காடு  மிகவும் குறைவாக உள்ளதால்இதனை மேம்படுத்த பாடத்திட்டதிலும் தேர்வு முறையிலும்  உரிய  மாற்றங்களை  கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட தீர்மானகள் நிறைவேற்றப்பட்டது


தொடர்ந்து வரும் இரண்டு ஆண்டுகள் அறிவியல் இயக்க பணிகளை செயல்படுத்த புதிய பொதுக்குழு, செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு தேர்வுசெய்யப்பட்டது.

நிர்வாகிகள் : தலைவர் முனைவர்.R.சாம்சன்ரவீந்திரன். செயலாளர்  திருமிகு.V.ராமமூர்த்தி,  பொருளாளர் திருமிகு.G.சுரேஷ், துணைத்தலைவர்கள் திருமிகு.பவளவள்ளி, திருமிகு.K.P.சுரேஷ்குமார், திருமிகு.K.சந்திரசேகர், திருமிகு.V.சீனிவாசன்,  இணை செயலாளர்கள் திருமிகு.M.கற்பகம், திருமிகு.J.பாலசரவணன்,  திருமிகு.D.திருநாவுக்கரசு,  திருமிகு.N.கோபால். கருத்தாளர் இணையம் ஒருங்கிணைப்பாளர்கள் திருமிகு.R.சசிகலா, திருமிகு.T.அந்தோணி ஜோதி நம்பி.


மாநாட்டில் மாவட்டத்தின் பல்வேறுக் கிளைகளில்  இருந்து உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் என 75 பேர் கலந்துக்கொண்டனர், மாநகரக் கிளை தலைவர் திருமிகு.M.கற்பகம் நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக