இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

திங்கள், பிப்ரவரி 08, 2010

இளைஞர்கள் அறிவியல் திருவிழா 23 & 24-01-2010 ( 13 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் அறிவியல் திருவிழாவை 23 & 24-01-2010 ஆகிய இரு நாட்கள் நடத்தியது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டா மாணவர்கள் காலநிலை மாற்றம், அறிவியலும் அரசியலும், அறிவியல் பரப்புதல் போன்ற கருத்தரங்கில் கலந்துகொண்டனர், சேலம் மாவட்ட செயலர் திருமிகு ஜெயமுருகன் கலந்துகொண்டு வான் நோக்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபஞ்ச ஆச்சரியங்களை மாணவர்களுக்கு விளக்கினார் , கருத்தாளர் திருமிகு.அஜித்.எஸ்.பத்மநாபன் மாணவர்களுக்கான இணையதளத்தை உருவாக்கி வெளியிட்டார் www.youth4earth.org , அறிவியல் இயக்க ஆர்வலர்கள், நிற்வாகிகள், கருத்தாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக