அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
நாள்காட்டி
திங்கள், பிப்ரவரி 08, 2010
கிரகண பொங்கல் கொண்டாட்டம் 15-01-2010 ( 47 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக தமிழகம் முழுதும் கிரகண பொங்கல் கொண்டாடப்பட்டது, சேலம் மாவட்டத்தின் சார்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிர்வாகிகள் ஆர்வலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் கிரகணம் காண்பிக்கப்பட்டது , பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான கிரகணம் காணும் நிகழ்ச்சி சிப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது, சூரிய ஒளிவடிகட்டி கண்ணாடிகள் வாயிலாகவும், தொலைநோக்கி உதவியுடன் பிம்பத்தை திரையிட்டும் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது ஏராளமான மக்கள் பங்கேற்று ஆர்வமுடன் பார்வையிட்டனர், நிகழ்ச்சியில் பொங்கல் விநியோகிக்கப்பட்டு அனைவரும் சுவைத்துகொண்டே கிரகணம் கண்டுரசித்தனர், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் என மக்கள் கலந்துகொண்டனர், நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கர்ப்பிணி பெண் கலந்துகொண்டார் மாவட்ட செயலாளர் திருமிகு.ஜெயமுருகன், மாவட்ட தலைவர் திருமிகு. சாம்சன் ரவீந்திரன், பொருளாளர் திருமிகு.ராமமூர்த்தி, துணை தலைவர் திருமிகு.ராம்பாபு, இணை செயலாளர் திருமிகு, சுரேஷ், துளிர் இல்ல குழந்தைகள், மற்றும், அறிவியல் இயக்க ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக