அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
நாள்காட்டி
வியாழன், அக்டோபர் 22, 2009
சேலம் மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு இளம் விஞ்ஞானிகளின் நிகழ்ச்சி 29-09-௨00௯ (18)
தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் இளம் விஞ்ஞானிகள் (குளுனி பள்ளி ) தங்களது ஆய்வாக சுற்றுசூழல் சார்ந்து மேற்கொண்டு வருகின்றனர், அதன் ஒருபகுதியாக தங்களின் ஆய்வு பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையிலும் விளக்கும் வகையிலும் 29-09-2009 அன்று சேலம் மாவட்ட கன்னங்குருசி பகுதியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர், நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக தேசியகுலந்தைகள் அறிவியல் மாநாட்டின் பொறுப்பாளர்கள் (மற்றும் இணை செயலாளர்களான) திருமிகு.K.P.சுரேஷ்குமார் மற்றும், திருமிகு.ஆண்டனிஜோதிநம்பி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றினர், மேலும் நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட மேயர் திருமிகு.ரேகா பிரியதர்சினி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக