இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், ஆகஸ்ட் 04, 2009

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் 9 வது மாவட்ட மாநாடு 02-08-2009

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட 9 வது மாநாடு 02-08-2009 அன்று சேலம் மோகன் நகர் டவுன்ஷிப்ஹால் திருமணமண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பேராசிரியர் P.M. திருநாவுக்கரசு அவர்களின் நினைவகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இம்மாநாட்டை C.S.I பாலிடெக்னிக் கல்லுரியின் முதல்வரும், அறிவியல் இயக்கத்தின் தலைவருமான திருமிகு R.சாம்சன்ரவீந்திரன் அவர்கள் தலைமையேற்க, மும்பை நேரு அறிவியல் மையத்தின் முன்னால் இயக்குனரும் தலைசிறந்த வானியல் அறிஞருமான முனைவர் V.S.வெங்கடவரதன், சேலம் உருக்காலை மோகன் நகர் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேனிலைப்பள்ளியின் முதல்வரும், அறிவியல் இயக்க மோகன் நகர் கிளையின் தலைவருமான முனைவர் P.கண்ணப்பன், மாரமங்கலத்துப்பட்டி பஞ்சாயத்தின் துணை தலைவர் திருமிகு.பிரேமா கண்ணன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் திருமிகுஅசோகன்முத்துசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட துணை தலைவர் திருமிகு .சசிகலா அவர்கள் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை அறிவியல் இயக்க ஆர்வலரும் உருக்காலை உலோகவியல் துறை மேலாளர் திருமிகு.K.S.சர்மா அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்,

மாவட்ட மாநாட்டையொட்டி நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கிற்கு அறிவியல் எழுத்தாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான திருமிகு. B.S.இளங்கோ அவர்கள் தலைமையேற்க " நமக்கான பள்ளி கல்வி " எனும் தலைப்பில் மாநில செயலர் திருமிகு.மாதவன் அவர்களும் " உயரங்களை தொடவேண்டிய உயர்கல்வி" எனும் தலைப்பில் ஈரோடு மாவட்ட செயலர் முனைவர் N.மணி அவர்களும் சிறப்புரயற்றினர், முன்னதாக திருமிகு.B.S.இளங்கோ அவர்கள் எழுதிய " கல்வி சிந்தனையாளர் - மரியா மாண்டிசேரி " எனும் அறிவியல் புத்தகத்தை மாநிலத் துணைத்தலைவர் சோ .மோகனா அவர்கள் வெளியிட பிரதிகளை திருமிகு .R.சாம்சன்ரவீந்திரன் அவர்களும் திருமிகு.P.கண்ணப்பன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்,
மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான வேலை அறிக்கையை மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் சமர்பித்தார், வரவு செலவு விபர அறிக்கையை பொருளாளர் திருமிகு.பாலசரவணன் சமர்பித்தார்,
பிரதிநிதிகளின் விவாதத்திற்கு பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக