இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

வியாழன், ஆகஸ்ட் 20, 2009

பன்றிக்கய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி 19-08-2009 ( 4 )


சேலம் ரோட்டரி கிளப் சார்பாக 19-08-2009 அன்று மாலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற பன்றிக்கய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட கருதாளர் இணைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.D.திருநாவுகரசு,உதவி பேராசிரியர், Medical Microbiologist,(அரசு மோகன்குமாரமங்களம் மருத்துவக்கல்லுரி, சேலம்.) அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியாளர் தலைமையேற்றார் ,அரசு மோகன்குமாரமங்களம் மருத்துவக்கல்லுரி தலைமை மருத்துவர் துவக்கிவைத்தார், பன்றிக்காய்ச்சல் வைரஸ் - தடுப்புமுறை மற்றும் சிகிச்சை பற்றி டாக்டர்.விஜயசங்கரகுமார் உதவி பேராசிரியர் (அரசு மோகன்குமாரமங்களம் மருத்துவக்கல்லுரி, சேலம்.) அவர்கள் சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சிக்கு மாணவர்கள், ஆர்வலர்கள், உறுப்பினர்கள் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர். ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக