இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

திங்கள், ஜூலை 27, 2009

அறிவியல்மன்ற துவக்கவிழா பண்ணப்பட்டி 27-07-2009




ஓமலூர் தாலுக்கா பண்ணப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியின் அறிவியல்மன்ற துவக்கவிழா 27-07-2009 அன்று மலை 3.00 மணி அளவில் நடைபெற்றது , நிகழ்ச்சின் துவக்கமாக தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் படத்தை திறந்துவைத்தார், நிகழ்ச்சியை இயற்பியல் ஆசிரியர் திருமிகு.ஜெகதீசன் ஒருகினைத்தார், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்ட செயலாளர் திருமிகு.ஜெயமுருகன் அவர்கள் கலந்துகொண்டு பள்ளியின் அறிவியல் மன்ற துவக்க விழாவினை சிறப்பித்தார், நிகழ்ச்சியில் அறிவியல் பாடல்கள் மற்றும் கருத்துரைகள் மூலமாக பல அறிவியல் செய்திகளை மாணவர்களிடையே பரப்பினார், சுமார் 400 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் வரை கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக