இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

ஞாயிறு, ஜூலை 19, 2009

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2009 - வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம் சேலம்- 18-07-2009


தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2009 இக்கான வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம் சேலம் இந்து மகாஜன மேல்நிலை பள்ளியில் 18-07-2009 அன்று காலை 10.00 முதல் மலை 05.00 வரை நடைபெற்றது, நிகழ்ச்சியை மாவட்டஒருங்கிணைப்பாளர் திருமிகு. ஆண்டனி.ஜோதினம்பி சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தார், நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர்.திருமிகு.சகஸரநாமம், மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன், துணை தலைவர்கள் திருமிகு.சசிகலா, திருமிகு.பாண்டியன், திருமிகு.இளங்கோ, துணை செயலர். திருமிகு. சுரேஷ்குமார், திருமிகு. திருநாவுகரசு, நிர்வாககுழு உறுப்பினர்கள்.திருமிகு.கோபால், திருமிகு.ஜோதிமாதன், மாநில கருத்தாளர். திருமிகு.அஜித் எஸ் பத்மநாபன், உறுப்பினர்கள் திருமிகு.ராமமுர்த்தி, திருமிகு.ராம்குமார், திருமிகு.லோகேஷ்சக்ரவர்த்தி மற்றும் மேட்டுர் கிளை நண்பர்கள், ஆசிரியர்கள் என 80 பேர் வரை கலந்துகொண்டனர், நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கலந்துகொண்டு சிறப்பித்தனர், கருத்தாளர்களின் கருத்துரைகளுக்கு பின்பு மாநாட்டிற்கு குழந்தைகளை எவ்வாறு வழிநடத்துவது என்று ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக