இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

ஞாயிறு, ஜூலை 12, 2009

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2009, வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 11-07-2009


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுக்கான, வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம், மேட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-07-2009 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சியை மேட்டுர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர், மேட்டூர், கொளத்தூர், சங்ககிரி, நங்கவள்ளி மற்றும் ஓமலூர் பகுதிகளிலுள்ள 50 கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர், புவிக்கோள்-அறிவோம் , பாதுகாப்போம், பகிர்ந்துகொள்வோம் என்ற பொது தலைப்பின் கீழ் கருத்தாளர்கள் திருமிகு,ஆர்.சுரேஷ்குமார் பெரியார் பல்கலைகழக பேராசிரியர், திருமிகு.பி.தங்கராஜ் நீரியல் வல்லுநர், செயலர் திருமிகு.ஜெயமுருகன், திருமிகு.நாகராஜன் பேராசிரியர், திருமிகு.எல்.என்.ராமகிருஷ்ணன் உருக்காலை, திருமிகு. அஜித் எஸ் பத்மநாபன் ஆகியோர் உரையாற்றினர் , கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதல் மற்றும் கையேடுவழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக