அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
நாள்காட்டி
ஞாயிறு, ஜூலை 19, 2009
மேட்டூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கொளத்தூரில் "கிரகணம் காணலாம் வாங்க" அறிவியல் விளக்க நிகழ்ச்சி 17-07-2009
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேட்டூர் கிளை சார்பாக கிரகணம் காணலாம் வாங்க! சிறப்பு வானியல் நிகழ்ச்சி 17-07-2009 அன்று மேட்டூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி கொளத்தூரில் காலை 10.30 முதல் மதியம் 12.00 மணிவரையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட செயலாளர் திரு. ஜெயமுருகன் கலந்துகொண்டு கிரகணங்கள் பற்றியும், இந்த நுற்றாண்டின் கிரகண முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ மாணவியர் இடையே விளக்கினார், நிகழ்ச்சியை மேட்டூர் கிளை சார்பாக திரு. சுப்ரமணி, திரு.ஆண்டனி ஜோதி நம்பி, திரு.டோம்னிக் என அணைத்து மேட்டூர் கிளை உறுப்பினர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் திருமிகு.K.P.பால் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் , நிகழ்ச்சியில் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக