இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

சிறப்பு கலந்துரையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்பு கலந்துரையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 20, 2009

சிறப்பு கலந்துரையாடல் 19-07-2009


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் சார்பாக 19-07-2009 அன்று மாவட்ட இணை செயலர் திருமிகு.பாலசரவணன் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது, நிகழ்ச்சியில் திருமிகு.அஜித்.எஸ்.பத்மநாபன், கார்த்திக், ராம்குமார், லோகேஷ்சக்ரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செவ்வாய், ஜூலை 14, 2009

சிறப்பு கலந்துரையாடல் ( 2 ) 12-07-2009

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் உறுப்பினர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி 12-07-2009.

ஞாயிறு, ஜூலை 05, 2009

சிறப்பு கலந்துரையாடல் ( 1 ) 05-07-2009

தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி 05-07-2009.