இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

திங்கள், ஜூலை 23, 2012

துளிர் வினாடி வினா - 2012


அன்புடையீர்,  வணக்கம் !
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை  நடத்துகிறது.
துளிர் வினாடி வினா
          இந்த ஆண்டும் துளிர் வினாடி வினா ஆகஸ்ட் 4ஆம் தேதி (சனிக்கிழமை) சேலம் C.S.I Good Shepherd Matric  மேல்நிலைப் பள்ளி (கோட்டை)யில் நட்த்துகிறது.
அனுமதி முற்றிலும் இலவசம். (நுழைவுக் கட்டணம் கிடையாது)
            எனவே துளிர் வினாடி வினா நிகழ்ச்சியில் தங்கள் பள்ளியின் மாணவர்களை கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
            துளிர் வினாடி வினாவில் கேட்கப்படும் கேள்விகள் பள்ளி பாடங்களில் இயற்பியல், வேதியியல்,உயிரியல், சமூக அறிவியல், வானியியல், கணக்கு(கணித ஆண்டு), ஆற்றல் (ஆற்றல் ஆண்டு) மற்றும் துளிர் ஜந்தர் மந்தர் ஆகியவற்றிலிருந்து கேட்கப்படும்
            குழுவில் பங்குபெறும் மாணவர்கள் கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.
1.    ஒவ்வொரு பிரிவிற்கும் 3 மாணவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்
2.    6,7,8 பிரிவு வகுப்பிற்கு தலா ஒருவர்
3.    9,10 பிரிவில் 9 ஆம் வகுப்பில் இருவர், 10 ஆம் வகுப்பில் ஒருவர்
4.    11,12 பிரிவில் 11 ஆம் வகுப்பில் இருவர், 12 ஆம் வகுப்பில் ஒருவர்
5.    ஒன்றியத்திலிருந்து மாநிலம் வரையிலும் பிரிவுகள் இதுதான்
6.    இதில் எந்த மாற்றமும் கூடாது
7.    மாணவர்கள் பள்ளி, ஒன்றியம், மாவட்டம், மாநிலம் என்றுதான் பங்கேற்க வேண்டும்.
            கலந்து கொள்ளும் குழுவை பற்றிய தகவல்களை துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு M.கற்பகம் அவர்களிடம் தகவல் கொடுக்கும்படிக் கேட்டு கொள்கிறோம். தகவலில் மாணவர்களின் பெயர், தலைமை ஆசிரியர் பெயர்,பள்ளியின் முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் கைபேசி எண்களை கொடுக்கும்படி கேட்டுகொள்கிறோம்.    
பதிவுக்கு கடைசி நாள் 30/07/2012.
நன்றி.                                                                                                    
                                                                                                                       இப்படிக்கு,
                                                                                                                           
                                                                                                              M.கற்பகம்,
                                                                                                        (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,                                                                                                                                                        
                                                                                                                   துளிர் வினாடி வினா)                                                                                                                                                         
                                                                                                             96594 53089, 78717 99969.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக