இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

புதன், செப்டம்பர் 22, 2010

இலையுதிர்கால சம இரவு-பகல் நாள் 22.09.2010











வணக்கம்.இன்று இரவு 11மணிக்கு, சமகால நாள் ஏற்பட உள்ளது. சமகால நாட்கள் என்பவை, ஒரு நாளில் இரவும் பகலும், சம கால அளவில்,அதாவது பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் என, இருக்கும்.நமது பூமி 231/2 டிகிரி சாய்வாக இருப்பதால் வருடத்தில் இரு நாட்கள் சமகால நாட்கள் வரும். அவை வசந்தத்தின் சமகால நாள் மற்றும் இலையுதிர்கால சமகால நாள் எனப்படும். பொதுவாக வசந்த சமகால நாள் மார்ச் 21 ம் நாளும், இலையுதிர்கால சமகால நாள் செப்டம்பர் 22 ம் வரும். சமகால் நாள் அன்று சூரியன் நிலநடு கோட்டை கடக்கும். வசந்த சமகால நாள் அன்று, . சூரியன் , பூமியின் தெற்குப் பகுதியிலிருந்து நிலநடுக்கோட்டை கடந்து, வடக்கு நோக்கி நகரும். இலையுதிர் கால சமகால நாள் அன்று,.சூரியன் வடபகுதியிலிருந்து நிலநடுக்கோட்டை கடந்து தெற்கு நோக்கி நகரும் .. ஆனால் 2010 ம் ஆண்டின் வசந்த சமகால நாள், மார்ச் 20 ல்மாலை 5 .39 க்கு நிகழ்ந்தது. இலையுதிர்கால சமகால நாள் செப்டம்பர் 22 ல், இரவு11.09மணியளவில் நிகழ உள்ளது.

Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642

````````````````````````````````````````````````



22.09.2010 இன்று இலையுதிர்கால சம இரவு-பகல் நாள் ( Autumnal Equinox). இன்றுமுதல் பூமியின் வடகோளத்தில் இருந்த சூரியன் தென்கோளத்திற்கு செல்வதால் இனி வடகோளத்தில் இரவு காலம் அதிகமாகும்.


அன்புடன்
சே. பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக